Tuesday, May 13, 2008

எனது புலம்பல்கள்_(13)

உன்னைப்பற்றி
நான் எழுதும் கவிதைகளின்
முடிவில் தொடரும்
என்றுபோட வேண்டும்...

ஏனெனில்...
உன்னைப்பற்றி
ஒரு கவிதையில் கூட
முழுமையாகச் சொல்ல
முடியவில்லை என்னால்...


Enrum Natpudan,
Sen22

Monday, May 12, 2008

எனது புலம்பல்கள்_(12)

நீ ஒரு ஹக்கூ கவிதை அல்ல..
இரண்டு வரியில் சொல்லிவிட..

நீ ஒரு மரபுக்கவிதை...
உன்னைப்பற்றிச் சொல்ல
ஓராயிரம் பக்கங்கள் வேண்டும்....!!



நீ ஒரு காவியமடி எனக்கு...
உன்னிடம் இருந்துதான்
எல்லாப் பண்புகளையும் கற்றேன்...




Enrum Natpudan,
Sen22

Thursday, May 8, 2008

எனது புலம்பல்கள்_(11)

சுற்றி சுற்றி
அடிக்கின்ற சூறாவளி
காற்று கூட...!!
உன்னைப் பார்த்து
சொக்கிப் போய் நிற்கின்றது...!!!

அந்த பாதரசத்தை
விட வலிமையானது...!!
உன்
விரல் பட்ட வென்னீர்...!!!


Enrum Natpudan,
Sen22

எனது புலம்பல்கள்_(10)

உன் கண்
என்னைப் பார்க்கின்றதா என்று..
என் கண்
என்னை முந்திப் பார்க்கின்றது...!!

உன் கண் - கண்ணல்ல...
எங்களை வீழ்த்தும் கன் (Gun)...!!!



என்றும் நட்புடன்,
Sen22