Tuesday, May 13, 2008

எனது புலம்பல்கள்_(13)

உன்னைப்பற்றி
நான் எழுதும் கவிதைகளின்
முடிவில் தொடரும்
என்றுபோட வேண்டும்...

ஏனெனில்...
உன்னைப்பற்றி
ஒரு கவிதையில் கூட
முழுமையாகச் சொல்ல
முடியவில்லை என்னால்...


Enrum Natpudan,
Sen22

Monday, May 12, 2008

எனது புலம்பல்கள்_(12)

நீ ஒரு ஹக்கூ கவிதை அல்ல..
இரண்டு வரியில் சொல்லிவிட..

நீ ஒரு மரபுக்கவிதை...
உன்னைப்பற்றிச் சொல்ல
ஓராயிரம் பக்கங்கள் வேண்டும்....!!



நீ ஒரு காவியமடி எனக்கு...
உன்னிடம் இருந்துதான்
எல்லாப் பண்புகளையும் கற்றேன்...




Enrum Natpudan,
Sen22

Thursday, May 8, 2008

எனது புலம்பல்கள்_(11)

சுற்றி சுற்றி
அடிக்கின்ற சூறாவளி
காற்று கூட...!!
உன்னைப் பார்த்து
சொக்கிப் போய் நிற்கின்றது...!!!

அந்த பாதரசத்தை
விட வலிமையானது...!!
உன்
விரல் பட்ட வென்னீர்...!!!


Enrum Natpudan,
Sen22

எனது புலம்பல்கள்_(10)

உன் கண்
என்னைப் பார்க்கின்றதா என்று..
என் கண்
என்னை முந்திப் பார்க்கின்றது...!!

உன் கண் - கண்ணல்ல...
எங்களை வீழ்த்தும் கன் (Gun)...!!!



என்றும் நட்புடன்,
Sen22

Wednesday, April 23, 2008

எனது புலம்பல்கள்_(9)

என்னவளுக்கு..
கண்கள் இரண்டு...
கன்னத்தில் குழிகள் இரண்டு...
கைகள் இரண்டு...
கைகள் செய்யும் வேலைகள் இரண்டு...
கால்கள் இரண்டு...
என்னவளுக்கு...

இதயமும் இரண்டுதான்....
ஆம்...
என் இதயம் அவளிடத்தில்....

என்றும் நட்புடன்,
Sen22

வவாசங்கம் போட்டிக்காக இந்த கவிதை....
http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html

Tuesday, April 22, 2008

எனது புலம்பல்கள்_(8)

நீ பேசா மொழியெல்லாம்
நீ பேசும் மொழியை
பார்த்து பொறாமைப்படுகின்றன....
நீ பேசவில்லையே என்று....


என்றும் நட்புடன்
Sen22

Thursday, April 17, 2008

எனது புலம்பல்கள்_(7)

நான் கவிதை எழுதுவது
உனக்கு மட்டும் தான்....
வேறு யாராவது கவிதை
எழுத சொன்னால்
அது கவிதைகள் அல்ல....
வெறும்
வார்த்தைகளாகத்தான்
இருக்கும்....

Enrum Natpudan.,
Sen22

எனது புலம்பல்கள்_(6)

நீ ஒரு வண்ணத்து பூச்சி..
எங்களை மட்டும்
சுற்றிவட்டமடிக்கும்
வண்ணத்து பூச்சி....

பூவில் இருந்துதான்
தேனைக்குடிக்கிறது
அந்த வண்ணத்து பூச்சி...
But.,
உனக்கு உன் உடம்பே
ஒரு தேனாய்....

Enrum Natpudan,
Sen22

Thursday, March 27, 2008

எனது புலம்பல்கள்_(5)

ஆண் மயிலுக்கு மட்டும் தான்
தோகை இருக்குமாம்....
யார் சொன்னார்கள்....
இங்கே பெண் மயிலுக்கும்
தோகை உண்டு....
என்னவள் அணியும்
துப்பட்டா...


Enrum Natpudan,
Sen22

Monday, March 24, 2008

எனது புலம்பல்கள்_(4)

நீ சிரிக்கும் சிரிப்பை
எங்கள் இசைஞானி இளையராசா
பார்க்கவில்லை....
பார்த்திருந்தால்....
உன் சிரிப்புக்கு
ஒருசிம்பொனி அமைத்து
"சிரிவாசகம்" தந்திருப்பார்....!!!


Enrum Anbudan.,
Sen22

எனது புலம்பல்கள்_(3)

இந்த உலகில் எல்லா
மொழிகளுக்கும் எழுத்து
வடிவம் உண்டு....
ஆனால்...,
நீ பேசும் மொழிக்கு
மட்டும் எழுத்து வடிவம்
இல்லை....
ஏனேனில்..,
நீ பேசும் மொழி
மழலை மொழி ஆயிற்றே.....



என்றும் நட்புடன்
Sen22

எனது புலம்பல்கள்_(2)

இந்த பேனா நான் எழுதும்போது

விட்டு விட்டு எழுதிஎன்னை

விட்டுவிடு என்கிறது...

ஆனால்..,

நீ எழுதும்போது மட்டும்

விடாமல் எழுதி

என்னை விட்ராதே என்கிறது...

என்றும் நட்புடன்

Sen22

Sunday, March 23, 2008

எனது புலம்பல்கள்_(1)

Enathu Muthal Kavithai

Kanne Sudha,

Nee Pootirukkum Dress-o Oothaa..

Naanee Oru Sotha...

Nee Onru Konduvaa Kalar Soda...

Enrum Natpudan,

Sen22